ரஞ்சி கோப்பை 2022: மும்பையை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்றது மத்திய பிரதேசம்!

Updated: Sun, Jun 26 2022 15:25 IST
Ranji Trophy Final: Madhya Pradesh wins their first-ever Ranji Trophy title! (Image Source: Google)

ரஞ்சிக் கோப்பை தொடரின் நடப்பானடு சீசனுக்கான இறுதிப் போட்டியில் மும்பை - மத்தியப் பிரதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த இறுதிப்போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த போதிலும் சர்பராஸ் கானின் சதம் மற்றும் ஜெய்ஸ்வாலின் அரைசதத்தின் உதவியுடன் 374 ரன்களை குவித்தது.

இதையடுத்து களமிறங்கிய மத்தியப் பிரதேச ஓப்பனர்கள் யஷ் துபே மற்றும் ஹிமான்சு மந்திரி ஆகியோர் மும்பை பவுலர்களுக்கு கடும் சவால் அளித்தனர். ஹிமான்சு 31 ரன்களில் ஆட்டமிழக்க, யஷ் துபே சதம் விளாசி அசத்தினார். இதையடுத்து களமிறங்கிய சுபம் ஷர்மா மற்றும் ரஜத் படிதார் ஆகிய இருவரும் மும்பை பவுலர்களை கடுமையாக சோதித்தனர்.

இருவரும் அரைசதம் கடந்த போது, படிதார் கொடுத்த கேட்சை சரியாக பிடித்தபோதிலும், அது நோ பாலாக அறிவிக்கப்பட மும்பை பவுலர்கள் சோர்வடைந்தனர். மளமளவென இருவரும் போட்டி போட்டு ரன் குவித்து இருவரும் சதம் கடந்தனர். இதன்பின் வந்தவர்கள் கடகடவென அவுட்டான போதிலும், சாரன்ஷ் ஜெயின் பொறுப்பாக விளையாடி அரைசதம் விளாச 500 ரன்களை அசால்ட்டாக கடந்தது மத்தியப் பிரதேச அணி.

இதையடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மத்தியப் பிரதேச அணி 536 ரன்களை குவித்தது. அணியில் அபாரமாக விளையாடிய யஷ் துபே, சுபம் ஷர்மா மற்றும் ரஜத் படிதார் ஆகிய மூவரின் சதத்தால் இந்த இமாலய ஸ்கோரை எட்டியது மத்திய பிரதேச அணி. 

அதன்பின் 162 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆட்டத்தை துவங்கிய மும்பை அணி துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஓப்பனர்களான பிரித்வி ஷா மற்றும் ஹர்திக் தமோர் இருவரையும் அரைசதத்தை கூட நெருங்க விடாமல் வெளியேற்றினர் மத்திய பிரதேச பவுலர்கள்.

இதனால் 4ஆம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களை மும்பை அணி குவித்துள்ளது. இதையடுத்து இன்று தொடங்கிய ஐந்தாம் நாள் ஆட்டத்தில் மத்திய பிரதேச பந்துவீச்சாளர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இதனால் மும்பை ஆணி 269 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மத்திய பிரதேச அணி தரப்பில் குமார் கார்த்திகேயா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் மத்திய பிரதேச அணிக்கு 108 ரன்கள் என்ற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

அதன்படி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய மத்திய பிரதேச அணியில் யாஷ் தூபே ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் 37 ரன்களில் ஹமன்ஷு மந்த்ரி 37 ரன்னிலும், ஷுபம் சர்மா 30 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தர்.

இதையடுத்து களமிறங்கிய ராஜத் படித்தார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் மத்திய பிரதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதனைப்படைத்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை