ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று தொடங்கிய லீக் ஆட்டம் ஒன்று அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஹைத்ராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைத்ராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அருணாச்சலப் பிரதேச அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Advertisement

அந்த அணியில் அதிகபட்சமாக டெக்கி டோரியா 97 ரன்களைச் சேர்த்தார். ஹைதராபாத் அணி தரப்பில் கார்த்திகேயா, மிலாந்த் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஹைத்ராபாத் அணிக்கு தன்மய் அகர்வால் - கேப்டன் கஹ்லாத் ராகுல் சிங் இணை ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி பந்துவீச்சை சிதறடித்தனர். 

Advertisement

அருணாச்சல பிரதேச வீரர்கள் வீசிய ஓவ்வொரு ஓவருக்கும் பவுண்டரியும், சிக்சர்களுமாக பறக்கவிட்ட இந்த அணி முதல் விக்கெட்டிற்கு 345 ரன்கள் என்ற இமாலய பார்ட்னர்ஷிப்பை அமைத்து மிரட்டினர். இதில் இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கஹ்லாத் ராகுல் சிங் 26 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 185  ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

அதேசமயம் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தன்மய் அகர்வால் 147 பந்துகளில் முற்சதம் விளாசி சாதனைகளை குவித்துள்ளார். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 529 ரன்களைக் குவித்தது. இதில் தன்மய் அகர்வால் 33 பவுண்டரி, 21 சிக்சர்கள் என 323 ரன்களுடன் களத்தில் உள்ளார். 

 

தன்மய் அகர்வால் சாதனைகள்

Advertisement

இப்போட்டியில் 119 பந்துகளில் இரட்டை சதம் அடித்த தன்மய் அகர்வால் முதல் தர கிரிக்கெட்டில் அதிகவேகமாக இரட்டை சதம் அடித்து வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதன்பின் தொடர்ந்து அதிரடியாக விளையாடி 147 பந்துகளில் தனது முற்சதத்தையும் பதிவுசெய்து, முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக முற்சதம் விளாசிய வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார். 

இப்போட்டியில் அவர் 21 சிக்சர்களை விளாசியதன் மூலம்,  இந்திய முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். முன்னதாக இஷான் கிஷன் 14 சிக்ஸ் அடித்ததே சாதனையாக இருந்த நிலையில் தற்போது அதனை தன்மய் அகர்வால் உடைத்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News