ஐபிஎல் தொடரின் அபார வெற்றியை தொடர்ந்து இந்தியாவில் இருக்கக்கூடிய மாநிலங்களின் கிரிக்கெட் சங்கங்களும் ஐபிஎல் தொடரின் அடிப்படையிலேயே டி20 கிரிக்கெட் லீக் போட்டிகளை நடத்தி வருகிறது. தமிழ்நாடு பிரிமியர் லீக் மற்றும் கர்நாடக மாநிலத்தில் நடத்தப்படும் மகாராஜா லீக் கிரிக்கெட் போட்டிகள் இந்திய அளவில் மிகவும் பிரபலமானவை. இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் டி20 கிரிக்கெட் லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன . 

Advertisement

தற்போது உத்திர பிரதேச மாநிலத்தில் உத்திர பிரதேஷ் கிரிக்கெட் லீக் போட்டிகள் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது . இந்த லீப் போட்டிகளில் ஆறு அணிகள் பங்கு பெற்று விளையாடி வருகின்றன. 33 போட்டிகளை கொண்ட இந்தத் தொடரானது செப்டம்பர் 16ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது அனைத்துப் போட்டிகளும் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. 

Advertisement

இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மீரட் மார்வலஸ் மற்றும் காசி ருத்ராஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய காசி ருத்ராஸ் அணி 20 ஓவர்களில் 181 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது . அந்த அணியின் கரன் ஷர்மா 58 ரன்களும், பிரியாங் பஞ்சால் 57 ரன்களும் எடுத்தனர் . இதனைத் தொடர்ந்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மீரட் மார்வலஸ் அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனால் போட்டி டிராவில் முடிவடைந்தது

மீரட் மார்வலஸ் அணியின் வீரரான மாதவ் கௌஷிக் ஆட்டம் இழக்காமல் 52 பந்துகளில் 87 ரன்கள் எடுத்திருந்தார். இதில் ஒன்பது பவுண்டரிகளும் நான்கு சிக்ஸர்களும் அடங்கும். மீரட் மார்வலஸ் அணிக்காக விளையாடிய ஐபிஎல் நட்சத்திரம் ரிங்கு சிங் 22 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். கோட்டி டிராவில் முடிவடைந்ததால் சூப்பர் ஓவர் முறையில் போட்டியின் முடிவை நிர்ணயம் செய்வதற்காக இரண்டு அணிகளும் மீண்டும் மோதின.

சூப்பர் ஓவரில் மீரட் மார்வலஸ் அணிக்காக யோகேந்திர தொய்லா சூப்பர் ஓவரில் பந்து வீசினார். காசி ருத்ராஸ் அணிக்காக விளையாடிய கரன் ஷர்மா ஐந்து பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 10 ரன்களில் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து ஆட வந்த முகமது சரிம் தான் சந்தித்த முதல் பந்திலேயே 6 எடுத்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு ஓவரில் காசி அணி 16 ரன்கள் குவித்தது.

 

Advertisement

இதனைத் தொடர்ந்து 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் சூப்பர் ஓவருக்கு விளையாட வந்தது மீரட் மார்வலஸ் அணி. அந்த அணிக்கு  ரிங்கு சிங் மற்றும் திவ்யனேஷ் ஜோஷி ஆகியோர் விளையாட வந்தனர். காசி அணிக்காக சிவா சிங் பந்து வீசினார். முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் மிகவும் மெதுவாக ஆடிய ரிங்கு சிங் சூப்பர் ஓவரின் முதல் பந்தை மிஸ் செய்த போதும் அதற்கு அடுத்த மூன்று பந்துகளையும் ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்து தனது அணியை சூப்பர் ஓவரில் வெற்றி பெறச் செய்தார். இந்நிலையில் இக்காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News