தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பந்த் யாருக்கு இடம்? - ஆடம் கில்கிறிஸ்ட் பதில்!

Updated: Fri, Sep 23 2022 16:45 IST
Rishabh Pant has 'definitely got to be' in Team India XI, says Adam Gilchrist (Image Source: Google)

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி காம்பினேஷன் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், விக்கெட் கீப்பராக யார் ஆடுவது என்பதுதான் இப்போதுவரை குழப்பமாக உள்ளது. ரிஷப் பந்த் தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்துவந்தார்.

ஆனால் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக அபாரமாக பேட்டிங்  ஆடி தன்னை ஒரு ஃபினிஷராக அடையாளம் காட்டிய தினேஷ் கார்த்திக், இந்திய அணியிலும் இடம்பிடித்தார். டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக மீண்டும் ஆட கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி தன்னை ஒரு ஃபினிஷராக நிலைநிறுத்திக்கொண்டார்.

ஆனால் கடைசி 5 ஓவர்களில் மட்டுமே அவர் களமிறக்கப்பட்டார். அதற்கு  முன் அவரை களமிறக்க இந்திய அணி நிர்வாகம் விரும்பவில்லை. கடைசி 5 ஓவர்களில் அல்லது 10-15 பந்துகள் ஆடுவதற்காக ஒரு வீரரை எடுக்கக்கூடாது. ஆட்டத்தை இக்கட்டான நிலையிலிருந்து கடைசிவரை எடுத்துச்சென்று முடித்து கொடுப்பவர் தான் ஃபினிஷர் தானே, கடைசி சில பந்துகளில் பெரிய ஷாட் ஆடி ஃபினிஷிங் டச் கொடுப்பவர் ஃபினிஷர் அல்ல என்ற விமர்சனம் எழுந்தது.

ரிஷப் பந்துக்கு ஆதரவாக சில முன்னாள் வீரர்களும், தினேஷ் கார்த்திக்கிற்கு ஆதரவாக சிலரும் குரல் கொடுத்தனர். டி20 உலக கோப்பையை கருத்தில்கொண்டு இருவரில் ஒருவரை இந்திய அணி ஆதரவளித்திருக்க வேண்டும். ஆனால் இருவரையும் மாற்றி மாற்றி இறக்கிவிட்டு, ஒரு தெளிவில்லாத சூழலை உருவாக்கி, அவர்கள் இருவருக்கும் குழப்பதை  ஏற்படுத்தி அணி நிர்வாகமும் குழப்பமடைகிறது.

ஆசிய கோப்பையில் முதல் போட்டியில் நன்றாக ஆடிய தினேஷ் கார்த்திக்கை ஓரங்கட்டிவிட்டு ரிஷப் பந்தை ஆடவைத்தது. இடையில் சில போட்டிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தினேஷ் கார்த்திக், கடைசி 5 இன்னிங்ஸ்களில் சொதப்பியுள்ளார். ரிஷப் பந்தும் நம்பிக்கையுடன் ஆடாமல் சொதப்பிவருகிறார்.
 
இந்நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக் தான் விக்கெட் கீப்பராக ஆடினார். ஆனால் அவர் 5 பந்தில் 6 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். டி20 உலக கோப்பையில் ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் யாரை ஆடவைப்பது என்று இன்னும் இந்திய அணி ஒரு திடமான முடிவெடுக்கவில்லை. 

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள ஆடம் கில்கிறிஸ்ட், “ரிஷப் பந்த் துணிச்சலான வீரர். உலகின் எப்பேர்ப்பட்ட பவுலிங் யூனிட்டையும் அடித்து துவம்சம் செய்யவல்லவர். இந்திய அணியின் பேட்டிங் லைனில் அவர் கண்டிப்பாக இருக்கவேண்டும். தினேஷ் கார்த்திக் வேண்டுமென்றால் அவரையும் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் ரிஷப் பந்த் கண்டிப்பாக ஆடவேண்டும்” என்று கருத்து கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை