தோனியை ஏன் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது? ராபின் உத்தப்பாவின் பதில்!

Updated: Thu, Apr 07 2022 13:46 IST
Image Source: Twitter

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் அணி அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. இருப்பினும் ரசிகர்களுக்கு ஆறுதலளிக்கும் விதமாக ராபின் உத்தப்பா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வினுடனான யூடியூப் பேட்டியின் போது ஐபிஎல் 2020 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, மகேந்திரசிங் தோனியை 'மஹி பாய்' என்று அழைப்பது கடினமாக இருந்ததாக ராபின் உத்தப்பா நினைவு கூர்ந்துள்ளார் . 

ரவிச்சந்திரன் அஸ்வினின் யூடியூப் சேனல் பேட்டிக்காக அவரிடம் பேசிய ராபின் உத்தப்பா, ''தோனியை இப்போது 'மஹி பாய்' என்று அழைப்பது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது. இதுவரையில் அவரை மஹி, எம்எஸ் என்றுதான் அழைத்திருக்கிறேன்.

2008க்குப் பிறகு, நான் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டப் பின், 12-13 ஆண்டுகளுக்குப் பிறகு தோனி தலைமையில் விளையாடுகிறேன். இதுவொரு பெருமையான தருணம். அப்போது ஒருமுறை தோனியிடம் தயக்கத்துடனே கேட்டேன். 'நான் உங்களை எவ்வாறு அழைக்க வேண்டும் நண்பா? எல்லோரும் உங்களை 'மஹி பாய்' என்று அழைப்பதால் நானும் அப்படித்தான் கூப்பிட வேண்டுமா' என்று கேட்டேன். 

அதற்கு தோனி, 'அதெல்லாம் தேவையில்லை. என்னை எம்.எஸ். என்றோ மஹி என்றோ கூப்பிடலாம். அல்லது நீங்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்' என்றார். அவ்வளவு எளிமையானவர் அவர். தோனியை ஏன் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு” என தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை