டி20 உலகக்கோப்பை: பயமறியா கிரிக்கெட் இது தான் - ரோஹித் சர்மா!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடர் நாளுக்கு நாளு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
உதில் நேற்று நடைபெற்ற 33ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழத்தி அபார வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து பேசிய ரோஹித் சர்மா, “இனி நாங்கள் எதாவது ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலும் தொடரிலிருந்து வெளியேறிவிடுவோம் என்பது தெரியும். அதனால் நாங்கள் அனைத்து போட்டிகளிலும் வெல்வது கட்டாயம்.
நீங்கள் அத்தகைய சூழ்நிலையில் இருக்கும்போது நீங்கள் பயமின்றி விளையாட வேண்டும், மற்ற இடங்களில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டாம்.
Also Read: T20 World Cup 2021
இன்றைய அணுகுமுறை ஒவ்வொருவரிடமும் வித்தியாசமாக இருந்தது என்று நினைக்கிறேன். முதல் இரண்டு ஆட்டங்களிலும் இது இருந்திருந்தால் நிச்சயம் நாங்கள் தோல்வியடைந்திருக்க மாட்டோம். நாம் பயமின்றி விளையாடும்போது வெற்றி நமக்குக் கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.