ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சும் 4ஆவது தோல்வியை தழுவின.

Advertisement

மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் வீழ்ந்தது. சிஎஸ்கே தொடர்ந்து 4ஆவது தோல்வியை தழுவியது.

Advertisement

புனேயில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்தது. இதனால் பெங்களூர் அணிக்கு 152 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக 37 பந்தில் 68 ரன் (5 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தனர். கேப்டன் ரோகித்சர்மா 15 பந்தில் 26 ரன் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். ஹசரங்கா, ஹர்‌ஷல் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

பின்னர் ஆடிய பெங்களூரு அணி 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அனுஜ் ராவத் 47 பந்தில் 66 ரன்னும் (2 பவுண்டரி, 6 சிக்சர்), விராட் கோலி 36 பந்தில் 48 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர்.

Advertisement

மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 4ஆவது தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்காக கேப்டன் ரோஹித் சர்மா தன்னை தானே குற்றம் சாட்டிக்கொண்டார். 

இதுகுறித்து பேசிய அவர், “எங்களிடம் இருக்கும் வெளிநாட்டு வீரர்களில் சிறந்த 2 பேரை தேர்ந்து எடுத்தோம். நான் முடிந்தவரை பேட் செய்ய விரும்பினேன். ஆனால் தவறான நேரத்தில் வெளியேறி விட்டேன். நாங்கள் 50 ரன் வரை பார்ட்னர்ஷிப்பில் இருந்தோம். ஆனால் தவறான மோதலில் நான் அவுட் ஆனது எங்களுக்கு வலியை ஏற்படுத்தியது.

இந்த ஆடுகளத்தில் 150 ரன் போதுமானது இல்லை என்று கண்டிப்பாக தெரியும். சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடியதால்தான் இந்த ரன் வந்தது 151 ரன்னை வைத்து பந்துவீச்சாளர்களால் ஒன்றும் செய்ய இயலாது” என்று தெரிவித்தார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News