ஐபிஎல் தொடரில் 8ஆவது லீக் போட்டியாக நேற்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 18.2 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் பின்னர் ஆடிய கொல்கத்தா அணி, தோல்வி பயத்தை காட்டிய போதும், இறுதியில் அபார வெற்றி பெற்றது.

Advertisement

அதன்பின் 138 என்ற குறைந்த இலக்குடன் களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர் அஜிங்கியா ரகானே 12 ரன்களுக்கும், வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேறினர். இதன் பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 26 ரன்களுக்கும், நிதிஷ் ராணா டக் அவுட்டும் ஆகி அதிர்ச்சி தந்தனர். இதனால் கொல்கத்தா அணி 51 ரன்களுக்கெல்லாம் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

Advertisement

அப்போது களத்திற்கு வந்த ஆண்ரே ரஸ்ஸல், வானவேடிக்கை காட்டினார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தடுமாறிய பிட்ச்-ல் ரஸ்ஸல் மட்டும் பஞ்சாப் அணியின் ஒவ்வொரு பந்தையும் துவம்சம் செய்து 26 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதனால் அந்த அணி 14.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டியது. 31 பந்துகளை சந்தித்த ரஸ்ஸல் 2 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்களுடன் 70 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய ரஸ்ஸல், “மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 4 விக்கெட்கள் சென்றுவிட்டன, எனக்கு பிறகு பவுலர்கள் தான் உள்ளனர். எனவே பொறுப்பை உணர்ந்து விளையாடினேன். ஸ்பின்னர்களுக்கு பிட்ச் உதவவில்லை. இதனால் தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டி வந்தேன். என்னுடைய முழு திறனையும் கொண்டு வந்துதான் ஆடியுள்ளேன்.

இருப்பினும் எனக்கு ஒரு குறை உள்ளது. டெத் ஓவர்களில் பவுலிங் செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன். பவர் பிளேவில் வாய்ப்பு தந்தால் அதனையும் மகிழ்ச்சியுடன் ஏற்பேன். அணியில் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள் தான். 4 ஓவர்களையும் வீச வேண்டும் என கேட்கவில்லை. குறைந்தது 2 ஓவர்களாவது எனக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும்.

ஏனென்றால் ஒரு ஆல்ரவுண்டரான நான் பேட்டிங்கில் மட்டும் சிறப்பாக இருந்தால் மன ஆறுதல் இருக்காது. பவுலிங்கிலும் எனது பங்கை சரியாக கொடுத்தால் தான் நானும், உதவினேன் என்ற எண்ணம் இருக்கும். இவை நடக்கும் என எதிர்பார்க்கிறேன்” எனத்தெரிவித்தார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News