விராட் கோலிக்கு என்ன ஆனது? ராகுல் விளக்கம்!

Updated: Mon, Jan 03 2022 14:51 IST
SA vs IND: Virat Kohli Sits Out Due To Injury
Image Source: Google

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று ஜோஹன்னஸ்பர்க்கில் இன்று துவங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் டாஸ் போட மைதானத்திற்கு வந்தது அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ஏனெனில் கேப்டன் விராட் கோலி களத்திற்கு வராமல் ராகுல் களத்திற்கு வந்ததால் என்ன ஆனது? என்று தெரியாமல் இருந்த ரசிகர்களுக்கு டாசிற்கு பிறகுதான் விராட் கோலி அணியில் இல்லை என்பது புரிந்தது.

மேலும் இந்திய அணியின் கேப்டனாக இந்த போட்டியில் ராகுல் முதன்முறையாக களமிறங்கினார். டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும் என்றும் அறிவித்தார். அதன்படி டாஸுக்கு பிறகு இந்திய அணியில் உள்ள மாற்றம் குறித்தும், விராட்கோலி ஏன் விளையாடவில்லை என்பது குறித்தும் ராகுல் தனது தெளிவான விளக்கத்தை அளித்திருந்தார்.

இதுகுறித்து பேசிய அவர், “விராட் கோலி எதிர்பாராவிதமாக முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள வலி காரணமாக இந்த போட்டியில் விளையாட முடியாமல் போனது. பிசியோதெரபிஸ்ட் அவருக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். நிச்சயம் அவர் அடுத்த போட்டிகள் தயாராகிவிடுவார். 

ஒவ்வொரு இந்திய வீரரும் இந்திய அணிக்காக கேப்டன்சி செய்ய வேண்டும் என்ற கனவு இருக்கும். அந்த வகையில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்துவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்.

இந்த சவாலை எதிர்கொண்டு நான் விளையாட தயாராக இருக்கிறேன். இந்த மைதானத்தில் ஏற்கனவே இந்திய அணி சில வெற்றிகளை பெற்று உள்ளதால் நிச்சயம் அதை தொடர விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை