இலங்கை அணி தற்சமயம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில் தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி (நவம்பர் 27) டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஐடன் மார்க்ரம் 9 ரன்னிலும், டோனி டி ஸோர்ஸி 4 ரன்னிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 16 ரன்களூக்கும், டேவிட் பெட்டிங்ஹாம் 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் கைல் வெர்ரையன் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வியான் முல்டர், மார்கோ ஜான்சென், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மஹாராஜ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதற்கிடையில் டெம்பா பாவுமா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில் 70 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். 

Advertisement

இதனால் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை  அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய் அசிதா ஃபெர்னாண்டோ மற்றும் லஹிரு குமாரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு அரம்பமே அதிர்ச்சி காத்திருந்த்து. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பதும் நிஷங்கா, திமுத் கருணரத்னே, தினேஷ் சண்டிமால், ஏஞ்சலோ மேத்யூஸ், கேப்டன் தனஞ்செயா டி சில்வா உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப் ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். 

அதன்பின் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கமிந்து மெண்டிஸ் 13 ரன்களைச் சேர்த்த கையோடு ஆட்டமிழக்க, அதன்பின் களமிறங்கிய குசால் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா, விஷ்வா ஃபெர்னாண்டோ உள்ளிட்டோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 42 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சென் 6.5 ஓவர்களில் 13 ரன்களை மட்டுமே கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

பின்னர் 149 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொட்ங்கிய் தென் அப்பிரிக்க அணியில் கேப்டன் டெம்பா பவுமா மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தி வெளிப்படுத்தி சதமடித்து அசத்தினர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 366 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் அதிகபட்சமாக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 122 ரன்களையும், டெம்பா பவுமா 113 ரன்களையும் சேர்தனர். இலங்கை அணி தரப்பில் விஷ்வ ஃபெர்னாண்டோ, பிரபாத் ஜெயசூர்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன்மூலம் இலங்கை அணிக்கு 516 ரன்கள் என்ற இமாலய இலக்கை தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயித்தது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியில் திமுத் கருணரத்னே 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய தினேஷ் சண்டிமால் ஒருபக்க்ம் நிதான ஆட்டத்தி வெளிப்படுத்திய நிலையில், மறுமுனையில் பதும் நிஷங்கா 23 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 25 ரன்னிலும், கமிந்து மெண்டிஸ் 10 ரன்னிலும், ஜெயசூர்யா ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 103 ரன்களை மட்டுமே சேர்த்தது, 

Advertisement

இந்நிலையில் இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை சண்டிமால் 29 ரன்களுடனும், தனஞ்செயா ரன்கள் ஏதுமின்றியும் தொடர்ந்தனர். இதில் இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்து அசத்தினர். பின் 59 ரன்கள் எடுத்த நிலையில் தனஞ்செய டி சில்வ விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் சண்டிமாலும் 83 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய குசால் மெண்டிஸும் 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வய்ப்பை தவறவிட மற்ற வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 282 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மார்கோ ஜான்சென் 4 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா, ஜெரால்ட் கோட்ஸி மற்றும் கேஷவ் மஹாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 233 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மார்கோ ஜான்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News