தென் ஆப்பிரிக்க தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு; ரோஹித்தை கண்டிக்கும் பிசிசிஐ!

Updated: Tue, Sep 27 2022 10:15 IST
Shahbaz Ahmed, Shreyas Iyer replace Hardik Pandya and Deepak Hooda (Image Source: Google)

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. அக்டோபர் இறுதியில் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை பலப்படுத்தவும், அதற்கான பிளேயிங் லெவனை தேர்வு செய்வதற்காகவும் இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடரில் பங்கேற்க முடிவு செய்தது.

அதனடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தியது. இத்தொடரின் மூலம் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் பிரச்சினை தீர்ந்துள்ளதாகத் தெரிகிறது. இருவரில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்பட்டு, தனக்கான இடத்தை கிட்டதட்ட உறுதி செய்துவிட்டார். மேலும், பேட்டிங் வரிசையில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை. பந்துவீச்சில்தான் அக்சர் படேலை தவிர அனைவரும் சொதப்பினார்கள்.

இதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா பங்கேற்க உள்ளது. செப்டம்பர் 28ஆம் தேதி, அக்டோபர் 2,4 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம், கௌகாதி, இந்தூரில் போட்டிகள் நடைபெறும்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் இருந்து ஹார்திக் பாண்டியா ஓய்வுக்காக நீக்கப்பட்டு ஷாபஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார். இதுதான் தற்போது பிசிசிஐயில் பெரும் பிரச்சினையை உருவாக்கியுள்ளது.

சமீபத்தில் ரோஹித் சர்மா, கோச் டிராவிட் உடன் ஆலோசனை நடத்தியிருந்த பிசிசிஐ, ‘‘தென் ஆப்பிரிக்க தொடரில் டி20 உலகக் கோப்பைக்கான பிளேயிங் லெவன் இறுதி செய்து, ரெகுலராக அந்த பிளேயிங் லெவனைத்தான் களமிறக்க வேண்டும்’’ என பிசிசிஐ தெரிவித்தது. ஆனால் ரோஹித் சர்மாவோ, ‘‘தற்போதே அப்படி செய்தால், அது அணிக்குத்தான் பின்னடைவை ஏற்படுத்தும். தென் ஆப்பிரிக்க தொடருக்குப் பிறகு ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டங்களின்போது லெவன் அணியை உறுதி செய்துகொள்ளலாம்’’ எனக் கூறியிருக்கிறார்

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் இருந்து ஹார்திக் பாண்டியாவை ஓய்வுக்காக நீக்க வேண்டும் என ரோஹித் சர்மா பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். அப்போது பேசிய பிசிசிஐ நிர்வாகி, ‘‘எதற்கு ஓய்வு. முதல் போட்டி முடிந்தப் பிறகு அடுத்த போட்டி நடைபெற 4 நாட்கள் இருக்கிறது. இதுவே பெரிய ஓய்வுதான். இது போதாதா? எங்களுக்கு தேவை உலகக் கோப்பை. அவ்வளவுதான், நீங்கள் என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்ளப்படும்’’ எனக் கூறியிருக்கிறார்.

அதாவது, உலகக் கோப்பையை ரோஹித் பெற்றுக்கொடுக்கவில்லை என்றால், அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்பதை பிசிசிஐ நிர்வாகி மறைமுகமாக தெரிவித்திருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை