ரஞ்சி கோப்பைப் போட்டி பிப்ரவரி 17 முதல் தொடங்கியுள்ளது. குவாஹாட்டியில் நடைபெறும் எலைட் எச் பிரிவு ஆட்டத்தில் தமிழகமும் தில்லியும் மோதுகின்றன. டாஸ் வென்ற தமிழக அணி கேப்டன் விஜயசங்கர், ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். 

Advertisement

தில்லி அணி முதல் இன்னிங்ஸில் 141.2 ஓவர்களில் 452 ரன்கள் குவித்தது. யாஷ் துல், சிறப்பாக விளையாடி 150 பந்துகளில் 18 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 25 வயது லலித் யாதவ், 177 ரன்கள் எடுத்தார். 287 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகள் அடித்தார்.  தமிழகப் பந்துவீச்சாளர் எம். முகமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Advertisement

ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் எதிரணி முதல் இன்னிங்ஸில் 450 ரன்களை எடுத்தபோதெல்லாம் தமிழக அணி ஒருமுறை கூட முன்னிலை பெற்றதில்லை. நிலைமை இப்படியிருக்க, இந்த ஆட்டத்தில் தமிழக அணி என்ன செய்யப்போகிறது என்கிற ஆவல் பலரிடமும் இருந்தது.

தமிழக அணி ஆரம்பத்தில் மிகவும் தடுமாறியது. 162 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தபோது களமிறங்கினார் அதிரடி வீரர் ஷாருக் கான். அதன்பிறகு ஆட்டம் தமிழகம் பக்கம் நகர்ந்தது. இந்திரஜித் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 89 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் ரஞ்சி கோப்பைப் போட்டியில் தனது முதல் சதத்தை அடித்தார் ஷாருக் கான். 

இதன்பிறகு 113 பந்துகளில் 150 ரன்கள் அடித்து தமிழக அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினார். 7ஆவது விக்கெட்டுக்கு ஷாருக் கானும் ஜெகதீசனும் அருமையான கூட்டணியை அமைத்தார்கள்.  

ஷாருக்கானின் அதிரடி ஆட்டத்தால் தில்லி அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை தமிழ்நாடு தாண்டிச் சென்றது. அதன்பின் இரட்டை சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷாருக் கான் 194 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்ரமளித்தார். 

Advertisement

இதன்மூலம் தமிழக அணி 7 விக்கெட் இழப்புக்கு 474 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ஜெகதீசன் 48 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News