ஐசிசி 2023 உலகக் கோப்பைக்கு அனைத்து கிரிக்கெட் அணிகளும் தயாராகும் நடைபெற்று வரும் பயிற்சி போட்டிகளில் அனைத்து அணியினரும் விளையாடிவருகின்றனர். இதில் இன்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற பயிற்சி போட்டியில் வலுவான ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 48, மார்னஸ் லபுஷாக்னே 40, கிளன் மேக்ஸ்வெல் 77, கேமரூன் கிரீன் 50, ஜோஷ் இங்லீஷ் 48 ரன்கள் ரன்களைஒ எடுத்தனர்.

Advertisement

பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக உஷாமா மிர் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முன்னதாக இந்த போட்டியில் ஹரிஷ் ரவூப் வீசிய 23ஆவது ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ஸ்டீவ் ஸ்மித் லெக் சைட் திசையில் லேசாக தட்டி விட்டு இரண்டு ரன் எடுக்க ஓடினார். அப்போது அதை இருபுறங்களிலும் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் முகமது நவாஸ் மற்றும் இமாத் வாசிம் ஆகியோர் தடுப்பதற்காக வேகமாக ஓடி வந்தனர்.

இருப்பினும் கிட்டத்தட்ட இருவருமே மிகச் சரியாக ஓடி வந்த நிலையில் பந்து அவர்களுக்கு நடுவே பவுண்டரியை நோக்கி வந்து கொண்டிருந்த போது, ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொள்வோம் என்ற பயத்தில் பந்தை அவர் தடுப்பார் என்று இவரும் இவர் தடுப்பார் என்று அவரும் ஒருவருக்கொருவர் முகத்தை பார்த்தார்களே தவிர கடைசி வரை யாருமே தடுக்கவில்லை.

மறுபுறம் அந்த சமயத்திற்குள் மெதுவாக வந்து கொண்டிருந்த பந்து அவர்களை கடந்து பவுண்டரி எல்லையை தொட்டு ஆஸ்திரேலியாவுக்கு 4 எளிதான ரன்களை கொடுத்தது. இதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் கூச்சலிட்டு கலாய்த்த நிலையில் “இது மட்டும் பாகிஸ்தான் அணியில் மாறவில்லை” என்று நேரலையில் வர்ணனையாளராக செயல்பட்ட சஞ்சய் மஞ்ரேக்கர் கலகலப்பாக பேசினார்.

 

Advertisement

இந்நிலையில் இதை பார்த்த நட்சத்திர இந்திய வீரர் ஷிகர் தவான் “பாகிஸ்தான் மற்றும் அவர்களுடைய ஃபீல்டிங் எப்போதுமே முடியாத காதல் கதை” என்று தனது சமூக வலைதளப்பதிவில் காணொளியாக பதிவிட்டு கலாய்த்துள்ளார். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News