சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரில் இன்று நடைபெற்ற குரூப் இ பிரிவுக்கான லீக் போட்டியில் மும்பை மற்றும் சர்வீசஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சர்விசஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய மும்பை அணியில் தொடக்க வீரர் பிரத்வி ஷா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தர். அவரைத்தொடர்ந்து அஜிங்கியா ரஹானே 22 ரன்னிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 20 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் - ஷிவம் தூபே இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன், இருவரும் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்தனர். 

Advertisement

அதன்பின் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிவம் தூபே 2 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 71 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்களைச் சேர்த்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சர்விசஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை.

அணியின் டாப் அர்டர் வீரர்கள் நிதின் தன்வர், வினீத் தன்கர் அகியோர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, கன்வர் பதாக் 14 ரன்களுக்கும், கௌரவ் கொச்சர் 6 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் மோஹித் அஹ்லாவத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன் 54 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர். 

 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதனால் சர்விசஸ் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மும்பை அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும், ஷம்ஸ் முலானி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் மும்பை அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் சர்விசஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்நிலையில் இப்போட்டியில் ஷிவம் தூபே அதிரடியாக விளையாடி சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News