ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்றுவருகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும், குரூப் பி பிரிவில் வங்கதேச அணியும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.  இந்நிலையில் இன்று நடைபெறும் 6ஆவது போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Advertisement

லாகூரில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளது. மேலும் இப்போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றால் சூப்பர் 4 சுற்றுக்கு எளிதாக தகுதிபெறும். அதேசமயம் ஆஃப்கானிஸ்தான் அணி இப்போட்டியில் மிகப்பெரும் வெற்றியைப் பதிவுசெய்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - திமுத் கருணரத்னே இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் கருணரத்னே 36 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பதும் நிஷங்கா 41 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

பின்னர் வந்த சதீரா சமரவிக்ரமாவும் 3 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த குசால் மெண்டிஸ் - சரித் அசலங்கா இணை அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய குசால் மெண்டிஸ் அரைசதம் கடந்தார். அதேசமயம் மறுபக்கம் சரித் அசலங்கா 36 ரன்களிலும், தனஞ்செயா டி சில்வா 14 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த குசால் மெண்டிஸ் 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 91 ரன்களில் ரன் அவுட்டாகி சதத்தை தவறவிட்டார். 

இறுதியில் துனித் வெல்லலகே - மஹீஷ் தீக்‌ஷனா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதன்மூலம் இலங்கை அணி இன்னிங்ஸ் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்களை எடுத்தது. இதில் தீக்‌ஷனா 28 ரன்களையும், வெல்லலகே 33 ரன்களையும் சேர்த்தனர். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் குல்பதின் நைப் 4 விக்கெட்டுகளையும், ரஷித் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News