இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி பதும் நிஷங்கா, சரித் அசலங்கா ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் காரணமாக 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

இதில் அதிகபட்சமாக பதும் நிஷங்கா 55 ரன்களையும், சரித் அசலங்கா 52 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணி, இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

இறுதியில் அந்த அணி 24.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ரன்களை மட்டுமே சேர்த்தது. இலங்கை தரப்பில் ஜெஃப்ரி வான்டர்சே 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதன்மூலம் இலங்கை அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Advertisement

மேலும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சரித் அசலங்கா ஆட்டநாயகனாகவும், பதும் நிஷங்கா தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News