இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய மகளிர் அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று பல்லகலேவில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநால் போட்டி நடைபெற்று வருகிறது. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் கேப்டன் சமாரி அத்தபத்து 2 ரன்களிலும், கருணரத்னே ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். 

Advertisement

பின்னர் ஜோடி சேர்ந்த ஹாசினி பெரேரா - ஹர்ஷித்தா மாதவி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹாசினி பெரேரா 37 ரன்களிலும், ஹர்ஷித்தா மாதவி 28 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் களமிறங்கிய நிலாஷி டி சில்வாவும் 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை வீராங்கனைகள் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் 48.2 ஓவர்களில் இலங்கை மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரேனுகா சிங், தீப்தி சர்மா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News