இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் நடைபெற்று வருகின்ற வேளையில், இன்னொரு பக்கமாக இந்திய உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்பொழுது 10 அணிகள் இன்று விளையாடி வருகின்ற நிலையில், இன்று நடைப்ற்ற லீக் போட்டியில் பரோடா - ஹைதராபாத் அணிகள் பலப்பர்ட்சை நடத்தின.

Advertisement

இந்த போட்டியில் இந்திய அணிக்கு சமீபத்தில் அறிமுகமாகி விளையாடிய, ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் திலக் வர்மா கேப்டனாக இருந்து விளையாடினார். இன்றைய போட்டியில் அவர் ஆட்டம் இழக்காமல் 69 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 121 ரன்கள் குவித்து அசத்தினார். இவருக்கு அடுத்து இவரது அணியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 23தான். எல்லோரும் கைவிட்ட நிலையில் தனியாளாக நின்று போராடினார்.

Advertisement

இதன்முலம் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணியில் திலக் வர்மாவுடன் சேர்ந்து யாரும் சரியாக விளையாடாத காரணத்தினால், 200 ரன்களை எட்ட முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாட வந்த பரோடா அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 18.2 ஓவர்களில் மிக எளிதாக ஹைதராபாத் அணியை தோற்கடித்தது. அந்த அணியின் கேப்டன் குர்னால் பாண்டியா 36 பந்துகளில் 64 ரன்கள், விஷ்ணு சோலங்கி 37 பந்தில் 71 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் நின்று அசத்தினார்கள்.

இந்தத் தொடரில் இதுவரை திலக் வர்மா ஐந்து போட்டிகளில் விளையாடி 41, 58, 11, 40, 121 என 270 ரன்கள் குவித்திருக்கிறார். இவருடைய ரன் சராசரி 271 என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை நடக்க இருக்கின்ற காரணத்தினால், இந்திய டி20 அணியை கட்டமைக்க வேண்டிய தேவை அதிகமாக இருக்கிறது. எனவே தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி தொடர் மிகவும் முக்கியத்துவமானதாக மாறியிருக்கிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News