பாகிஸ்தானுடன் டி20 தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் 03ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. முன்னதாக வங்கதேசத்தில் நடைபெற இருந்த இத்தொடரானது, அங்கு நடைபெற்ற உள்நாட்டு கலவரம் காரணமாக தற்சமயம் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இந்த உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணையையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் அறிவித்துள்ளது.
அதில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி பிவிரில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அதன் படி, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானின் மகளிர் அணிகளை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன.
அதேசமயம் மீதமுள்ள அணிகளும் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எதிர்வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெறும் இத்தொடரானது செப்டம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
மேலும் இத்தொடரின் அனைத்து டி20 போட்டிகளும், முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தொடருக்கான இரு அணிகளும் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்காப்படுகிறது. அதேசமயம் இத்தொடர் முடிந்த கையோடு இவ்விரு அணிகளும் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.