இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வேகப்பந்து வீச்சாளருமான மலிங்கா கடந்த 2004ஆம் ஆண்டு முதல் இலங்கை அணிக்காக சர்வதேச கிரிக்கெட் விளையாடி வருகிறார். இதுவரை 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 101 விக்கெட்டுகளையும், 226 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 338 விக்கெட்டுகளையும், 84 20 போட்டிகளில் விளையாடி107 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

Advertisement

அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடர்களில் 122 போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் 2011 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதனை தொடர்ந்து 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.

Advertisement

எனினும் டி20 கிரிக்கெட்டில் தான் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் நிச்சயம் இலங்கை அணிக்காக இந்த உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக இன்று அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் விடை பெறுவதாக அறிவித்துள்ளார். 

தற்போது 38 வயதான அவர் 2014ஆம் ஆண்டு இலங்கை அணி டி20 உலகக் கோப்பையை வென்றபோது அணியின் கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள இந்த ஓய்வு அறிவிப்பில் “டி20 கிரிக்கெட்டில் எனது ஷூவிற்கு ஓய்வு கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. என்னுடைய இந்த பயணத்தில் எனக்கு ஆதரவளித்த அவர்களுக்கு நன்றி. இனிவரும் காலத்தில் நான் என்னுடைய அனுபவத்தை இளம் வீரர்களுடன் பகிர விரும்புகிறேன். இனிவரும் காலங்களில் எனது பணிக்கு ஓய்வு கொடுத்து இளம் வீரர்களை ஊக்குவிக்க போகிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 546 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர் உலகின் பல்வேறு நாடுகளிலும் டி20 போட்டிகளில் முன்னணி வீரராக செயல்பட்டு வந்தார். தற்போது வெளியான இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் அவர் பெயர் இடம்பெறாத விரக்தியில் அவர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்துள்ள மலிங்காவிற்கு முன்னாள் வீரர்கள், ஐசிசி, மும்பை இந்தியன்ஸ் என பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்கல் குவிந்து வருகின்றது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News