இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷிரன் ஃபெர்னாண்டோ. இவர் வங்கதேச அணிக்கெதிரான ஒருநாள் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக இவருக்கு தொற்று உறுதியானது.
Advertisement
இதையடுத்து மருத்துவ ஆலோசனையின் படி தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் இவருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில், தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.
Advertisement
இதனால் நாளை நடைபெறும் வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.