ஐபிஎல் வரலாற்றில் மிகவும் திறமையான பேட்டர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா, இந்திய டி20 லீக் மற்றும் நாட்டில் நடைபெறும் பிற உள்நாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். அவர் இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க டி20 லீக் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.  

Advertisement

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) ஜாம்பவான்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா, இந்திய டி20 லீக்கிற்கு டாடா சொல்லிவிட்டு, மற்ற நாட்டு கிரிக்கெட்டில் விளையாட உள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் ஒருவரான ரெய்னா, 2022 மெகா ஏலத்தில் அணிகளின் எண்ணிக்கை 8 முதல் 10 ஆக அதிகரித்த போதிலும் விற்கப்படாமல் போய்விட்டார்.

Advertisement

ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து ரெய்னா இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் உத்தரபிரதேச கிரிக்கெட் சங்கம் (யுபிசிஏ) ஆகியோரிடம் பேசியுள்ளார். உண்மையில், ரெய்னா ஏற்கனவே தனது மாநிலத்திற்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டாம் என்று முடிவு செய்து, யுபிசிஏ விடம் இருந்து என்ஓசி எடுத்துள்ளார்.  

தற்போது 35 வயதாகும் சுரேஷ் ரெய்னா, 2005 முதல் 2018 வரை இந்திய அணிக்காக 18 டெஸ்டுகள், 226 ஒருநாள், 78 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் 205 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். அவற்றில் பெரும்பாலான ஆட்டங்கள் சிஎஸ்கே அணிக்காக விளையாடியவை. 

இந்நிலையில் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா இன்று அறிவித்துள்ளார். இதன்மூலம் ஐபிஎல் மற்றும் இந்திய உள்ளூர் போட்டிகளில் அவர் இனி விளையாட மாட்டார். எனினும் இதற்குப் பிறகு வெளிநாட்டு லீக் போட்டிகள், சாலைப் பாதுகாப்பு போட்டி போன்ற டி20 லீக் போட்டிகளில் அவரால் சுதந்திரமாகப் பங்கேற்க முடியும். 

இதுகுறித்து பேசிய அவர், "இன்னும் 2-3 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன், உத்திரபிரதேச உள்நாட்டு அணியில் இப்போது நிறைய நல்ல வீரர்கள் உள்ளனர், மேலும் அவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். நான் யுபிசிஏ இலிருந்து என்ஓசி பெற்றுள்ளேன். எனது முடிவை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் ராஜீவ் சுக்லாவிடம் கூட தெரிவித்துள்ளேன். எனது வாழ்க்கையில் எனக்கு உறுதுணையாக இருந்த பிசிசிஐ மற்றும் யுபிசிஏவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். 

Advertisement

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு லீக்குகளில் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன். செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கும் சாலைப் பாதுகாப்பு உலகத் தொடரில் நான் இடம்பெறுவேன். தென் ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உரிமையாளர்கள் இதுவரை என்னை அணுகியுள்ளனர். நிலைமை சீரானதும், நானே அனைவருக்கும் தெரிவிப்பேன், ”என்று ரெய்னா கூறியுள்ளார்.  

ஐபிஎல் வரலாற்றில் ரெய்னா மிகப்பெரிய பெயர்களில் ஒருவர். ஐபிஎல் வரலாற்றில் 5வது அதிகபட்ச ஸ்கோராக உள்ளார். ரெய்னா ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், பிசிசிஐ விதிகளின்படி, அவர் இன்னும் வெளிநாட்டு டி20 லீக்கில் விளையாட தகுதி பெறவில்லை. 

நாட்டிற்கு வெளியே உள்ள தனியார் லீக்குகளில் விளையாட, அவர் ஐபிஎல்லில் இருந்தும் ஓய்வு பெற வேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போன்ற பல ஐபிஎல் உரிமையாளர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க லீக்குகளில் அணிகளை வாங்கியுள்ளனர். நீண்ட காலமாக சிஎஸ்கே வீரராக இருந்து வரும் ரெய்னா, தென் ஆப்பிரிக்க லீக்கில் சூப்பர் கிங்ஸ் அணிக்கு அழைக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News