இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது பெங்களூரு நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மேத்யூ வேட் முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.

Advertisement

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களையும், அக்சர் பட்டேல் 31 ரன்களையும் குவித்து அசத்தினர்.

Advertisement

பின்னர் 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே குவித்ததால் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் அவர்கள் அடைந்த தோல்வியின் மூலம் இந்த தொடரில் மட்டும் நான்காவது தோல்வியை சந்தித்துள்ளார்கள். அதேவேளையில் இந்திய அணி இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்த டி20 தொடரில் இந்திய அணி பெற்ற வெற்றி குறித்து பேசிய கேப்டன் சூரியகுமார் யாதவ், “இந்த தொடரானது இளம் இந்திய அணிக்கு மிகச் சிறப்பான தொடராக அமைந்தது. எங்களது அணியின் வீரர்கள் அனைவருமே மிகச் சிறப்பான செயல்பாட்டை இந்த தொடர் முழுவதுமே வெளிப்படுத்தி உள்ளார்கள். 

இந்த தொடரில் நாங்கள் பயமற்ற மகிழ்ச்சியான ஒரு ஆட்டத்தை விளையாட வேண்டும் என்று நினைத்து விளையாடினோம். அந்த வகையில் இந்த தொடர் முழுவதும் எங்களால் சிறப்பாக செயல்பட முடிந்ததில் மகிழ்ச்சி.

குறிப்பாக இந்த போட்டியில் 160 முதல் 175 ரன்கள் வரை அடித்தால் அது வெற்றிக்கு போதுமான ரன்களாக இருக்கும் என்று நான் ஏற்கனவே நமது அணி வீரர்களிடம் கூறினேன். அந்த வகையில் சிறப்பாக அவர்களை கட்டுப்படுத்தி நாங்கள் பெற்ற இந்த வெற்றி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என கூறியுள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News