வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நேற்று நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 164/5 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கெய்ல் மேயர்ஸ் 73 (50) ரன்கள் குவிக்க இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.  இதையடுத்து இலக்கை துரத்திய தொடர்ந்து 165 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு பொறுப்புடன் பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவ் 15 ஓவர்கள் வரை அபாரமாக பேட்டிங் செய்து 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 76 ரன்களைச் சேர்த்ததன் மூலம் 19 ஓவரில் 165/3 ரன்கள் எடுத்த இந்தியா 2 – 1 என்ற கணக்கில் மீண்டும் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. 

Advertisement

முன்னதாக இந்த தொடரில் சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா போன்ற வீரர்கள் ஓபனிங் இடத்தில் களமிறங்க தயாராக இருக்கும்போது சம்பந்தமே இல்லாமல் மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்படக்கூடிய சூர்யகுமார் யாதவ் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் முதல் 2 போட்டிகளில் அவர் தடுமாறியதால் அந்த முடிவை எடுத்த ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள். 

Advertisement

இந்நிலைமையில் இப்போட்டியில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்து ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் அனைத்து இடத்திலும் தம்மால் விளையாட முடியும் என்று நிரூபித்து டிராவிட் மற்றும் ரோஹித் மீதான விமர்சனங்களையும் உடைத்தார். அதிலும் பேக்லிப்ட் பந்தை அசால்டாக சிக்சர் அடித்த அவர் பந்திற்கு கீழே வந்து கீப்பருக்கு மேலே பவுண்டரியை பறக்க விட்டதை பார்த்த ரசிகர்கள் மெய்சிலிர்த்துப் போனார்கள்.

அதனால் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று ரசிகர்கள் கொண்டாடும் அவர் கடந்த 2021இல் அறிமுகமாகி ஒரு வருட காலத்திற்குள் எஞ்சிய அனைத்து இந்திய வீரர்களைக் விட அதிகபட்சமாக 4 ஆட்ட நாயகன் விருதுகளை வென்று புதிய நம்பிக்கை நட்சத்திரமாக அவதரித்துள்ளார். குறிப்பாக இங்கிலாந்து டி20 தொடரின் கடைசி போட்டியில் எஞ்சிய அனைத்து பேட்ஸ்மேன்களும் சொதப்பிய போது தனி ஒருவனாக சதமடித்து 117 ரன்கள் குவித்து வெற்றிக்காக போராடிய அவர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் சர்வதேச டி20 போட்டிகளுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் சமீப காலங்களில் அபாரமாக செயல்பட்டு 3-வது டி20 போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சூர்யகுமார் யாதவ் 4ஆவது இடத்திலிருந்து 816 புள்ளிகளை பெற்று 2ஆவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். 

சொல்லப்போனால் டாப் 10 தரவரிசை பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே இந்திய பேட்ஸ்மேனாகவும் சூர்யகுமார் யாதவ் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். கடந்த 2021இல் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமான போது தரவரிசையில் 1178ஆவது இடத்தில் இருந்த அவர் தனது மிகச் சிறப்பான செயல்பாடுகளால் 5ஆவது போட்டியில் நேரடியாக டாப் 100 பட்டியலுக்குள் நுழைந்து 77 இடத்தை பிடித்தார்.

Advertisement

மேலும் முதலிடத்தில் இருக்கும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை முந்துவதற்கு அவருக்கு இன்னும் வெறும் 3 புள்ளிகள் மட்டுமே தேவைப்படுகிறது. அதனால் இத்தொடரின் எஞ்சிய 2 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு அவரை முந்தி உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக வருவதற்கு அதிக வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஆனால் 2021 முதல் 26 இன்னிங்ஸ்சில் பாபர் அசாம் 1005 ரன்களை எடுத்துள்ள நிலையில் அதே காலக்கட்டத்தில் 20 இன்னிங்ஸ்சில் 648 ரன்களை மட்டுமே எடுத்த சூர்யகுமார் யாதவ் எப்படி திடீரென்று 2ஆவது இடத்திற்கு வந்தார் என தெரிவிக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் இதில் ஐசிசி தில்லுமுல்லு செய்துள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News