மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நியூசிலாந்தில் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான பயிற்சி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 

Advertisement

இதில் இன்று நடைபெற்ற பயிற்சி போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

Advertisement

அதன்படி களமிரங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ஹர்மன்ப்ரீத் கவுர் 104 ரன்காளையும், யஷ்திகா பாட்டியா 58 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் அயபோங்க காக்கா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணி ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை தக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

அந்த அணியில் லாரா வால்வோர்ட், சுனே லூஸ் ஆகியோரைத் தவிற மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் 50 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்ததது. இதன்மூலம் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News