பயிற்சியில் பங்கேற்காத ஹர்திக் பாண்டியா - தகவல்!

Updated: Tue, Jun 07 2022 15:10 IST
Image Source: Google

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 டி20 போட்டிகளில் மோதவுள்ளது. இந்த போட்டிகள் டெல்லியில் வரும் ஜூன் 9ஆம் தேதி தொடங்கி ஜூன் 19ஆம் தேதி முடிவுடைகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து வீரர்களும் நேற்று டெல்லி ஃபெரோசா கோட்லா மைதானத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கு நேற்று முதல் பயிற்சி முகாம் தொடங்கியது. 2 மாத ஐபிஎல் உலகத்தில் இருந்த வீரர்கள், நேற்று தீவிர வலைப்பயிற்சி மூலம் சர்வதேச தரத்திற்கு மாறினர். உம்ரான், அர்ஷ்தீப் போன்றோர் படு தீவிரமாக பயிற்சி மேற்கொண்டனர்.

இந்நிலையில் நேற்று நடந்த பயிற்சி முகாமில் ஹர்திக் பாண்டியா பங்கேற்கவில்லை. கேப்டன் கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக் என அனைத்து முன்னணி வீரர்களுமே வந்தபோதும் ஹர்திக் பாண்டியா வரவில்லை.

உலகக்கோப்பைக்கு பின்னர் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த பாண்டியா, தற்போது வாய்ப்பு கிடைத்தவுடன், இப்படி செய்வது நியாயமா? என ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இவரை போன்றே ஹர்ஷல் பட்டேல், யுவேந்திர சாஹல் ஆகியோரும் பங்கேற்கவில்லை.

நேற்று முதல் நாள் என்பதால், வீரர்கள் கலந்துக்கொள்ளாமல் போனாலும் பிரச்சினை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. எனினும் 4 நாட்கள் பயிற்சியாவது கண்டிப்பாக வேண்டும் என்பதற்காக வீரர்களின் விருப்பத்தின் பேரில் தான் நேற்று அனைத்து வீரர்களும் கலந்துக்கொண்டனர். ஹர்திக் பாண்டியா ஓய்வு எடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காக வராமல் போய்விட்டதாக தெரிகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை