சதமடித்து அசத்திய குசால் பெரேரா; வங்கதேசத்திற்கு 287 ரன்கள் இலக்கு!

Updated: Sat, May 29 2021 12:43 IST
The skipper Perera guides Sri Lanka to a competitive score (Image Source: Google)

இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று தாக்காவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசால் பெரேரா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். 

அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்க வீரர்கள் குசால் பெரேரா - குணத்திலக இணை அதிரடியான தொடக்கத்தை தந்தது. இதனால் முதல் 10 ஓவர்களிலேயே இலங்கை அணி  77 ரன்களை குவிந்திருந்தது. 

இதையடுத்து 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குணத்திலக ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய குசால் பெரேரா அரை சதம் கடந்தார். பின்னர் களமிறங்கிய நிஷன்கா ரன் ஏதுமின்றியும், குசால் மெண்டிஸ் 22 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். 

இருப்பினும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த குசால் பெரேரா சதமடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின்னர் 120 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குசால் பெரேராவும் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இறுதியில் தனஞ்செய டி சில்வா அதிரடியாக ஆடி அரைசதம் கடந்ததுடன், அணி 250 ரன்களை எட்டவும் உதவினார். இதன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்களை சேர்த்தது. 

இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக குசால் பெரேரா 120 ரன்களையும், தனஞ்செய டி சில்வா 55 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் டஸ்கின் அஹ்மத் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை