ஐபிஎல் 16ஆவது சீசனில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் ஐந்து வெற்றிகள் உடன் முதலிடத்தை பிடித்தது.

Advertisement

இந்த போட்டியில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கான்வே 56, சிவம் துபே 51, ரகானே 71 என மூன்று அதிரடி அரை சதங்கள் வர மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 20 ஓவர்களில் 235 ரன்கள் வந்தது.

Advertisement

இதை அடுத்து மிகப்பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய கொல்கத்தா அணிக்கு நல்ல துவக்கம் எதுவும் அமையவில்லை. காயமடைந்த ஜேசன் ராய் 61 ரன், இறுதிவரை களத்தில் நின்ற ரிங்கு சிங் 53 ரன்கள் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி, “இங்கே கூடியிருக்கும் ரசிகர்களின் அன்பிற்கு நன்றி. அவர்கள் எனக்கு பிரியாவிடை (Farewell) கொடுப்பதற்காக இப்படித் திரண்டிருக்கக்கூடும். அவர்களின் ஆதரவிற்கு நன்றி. இவர்களெல்லாம் அடுத்தப் போட்டியில் தங்களின் சொந்த அணியான கொல்கத்தாவின் ஜெர்சிக்கு மாறிவிடுவார்கள் என நம்புகிறேன்"

வேகப்பந்து வீச்சாளர்கள் பவர்ப்ளேயில் அவர்களின் வேலையைச் சரியாகச் செய்துவிட்டார்கள். ஸ்பின்னர்கள் மிடில் ஓவர்களைப் பார்த்துக் கொண்டார்கள். மைதானத்தின் ஒரு பக்க பவுண்டரி குறைவான தூரத்தைக் கொண்டதாக இருந்தது. அதற்கேற்ப நாங்கள் திட்டங்களை வகுத்துக் கொண்டோம். ஒரு வீரர் காயமடைந்துவிட்டால் அவரால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது என்பதை நான் அறிவேன். அப்படியான நேரங்களில் நன்கு தயாராக இருக்கும் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி ஊக்குவிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். 

மேலும் ரஹானே குறித்தான கேள்விக்குப் பதில் கூறிய தோனி, “ரஹானேவின் திறன் என்ன என்பது தெரியும். அவர் விருப்பப்படும் விதத்தில் ஆடும் சுதந்திரத்தை அவருக்குக் கொடுக்க வேண்டும். உங்களுடைய பலங்களை அறிந்து நேர்மறையான எண்ணத்தோடு அனுபவித்து ஆடுங்கள் என்பதுதான் அவருக்குக் கொடுக்கப்பட்ட அறிவுரை. மேலும், அவர் எந்த இடத்தில் ஆடினால் சௌகரியமாக உணர்வாரோ அதையும் உறுதி செய்து கொடுத்திருக்கிறோம்" என கூறியுள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News