ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2ஆவது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்ன் நகரில் தொடங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா கடுமையாகப் போராடி முதல் இன்னிங்சில் 318 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

Advertisement

அதிகபட்சமாக மார்னஸ் லபுஷாக்னே 63, உஸ்மான் கவாஜா 42 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அமீர் ஜமால் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு அப்துல்லா ஷபிக் 62, கேப்டன் சான் மசூத் 54 ரன்கள் எடுத்ததால் நல்ல துவக்கத்தை பெற்றது. ஆனாலும் அதன் பின் சிறப்பாக பந்து வீசிய ஆஸ்திரேலியா 264 ரன்களுக்கு பாகிஸ்தானை ஆல் அவுட் செய்தது.

Advertisement

ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 54 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜா 0, மார்னஸ் லபுஷாக்னே 4 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து ஹாஹின் அஃப்ரிடி அவுட்டாக்கி மிகப்பெரிய அச்சுறுத்தலை கொடுத்தார்.

அதனால் 6/2 என ஆஸ்திரேலியா தடுமாற்றமான தொடக்கத்தை பெற்ற போது 3ஆவது நாள் உணவு இடைவெளை வந்தது. ஆனால் அந்த இடைவெளி முடிந்தது போட்டி மீண்டும் தொடங்குவம் நேரத்தில் பெவிலியனில் இருந்த 3ஆவது நடுவர் ரிச்சர்ட் இல்லிங்ஒர்த் திடீரென காணவில்லை. இதன் காரணமாக போட்டி நிறுத்தப்பட்ட நிலையில் நடுவர் எங்கே என்று அனைவரும் தேடிப் பார்த்தனர்.

அப்போது அடுத்த சில நிமிடங்கள் கழித்து மிகவும் சோர்வாக வந்த நடுவர் நாற்காலியில் அமர்ந்து தாம் லிஃப்டில் மாட்டிக் கொண்டதாக வேடிக்கையாக தெரிவித்தார். அதாவது உணவு இடைவெளியில் ஏதோ ஒரு காரணத்திற்காக மைதானத்தின் மற்றொரு தளத்திற்கு சென்று வரும் வழியில் அவர் லிஃப்டில் பாதியிலேயே மாட்டிக்கொண்டதாக தெரிகிறது. 

அதன் பின் அதிலிருந்து வந்த அவர் நாற்காலியில் அமர்ந்து “நான் நன்றாக இருக்கிறேன்” என்பது போல் கையை சிக்னல் கொடுத்தது ரசிகர்களையும் வர்ணனையாளர்களையும் சிரிப்பில் ஆழ்த்தியது. குறிப்பாக பேட்டிங் செய்வதற்காக களத்தில் இருந்த டேவிட் வார்னர் மற்றும் எஞ்சிய 2 நடுவர்களும் 3ஆவது நடுவர் லிஃப்டில் மாட்டிக் கொண்டார் என்பதை அறிந்து வாய்விட்டு சிரித்தார்கள். இக்காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News