டிஎன்பிஎல் 2021: அபாரஜித், ரஞ்சன் அதிரடியில் நெல்லை ஆபார வெற்றி!

Updated: Sat, Jul 24 2021 19:22 IST
Image Source: Google

டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீச் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. 

அதன்படி களமிறங்கிய அந்த அணியில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தாலும், மறுமுனையில் ஜெகதீசன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர், 95 ரன்னில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை மட்டுமே எடுக்கமுடிந்தது. 

அதன்பின் இலக்கை துரத்திய நெல்லை அணியில் சூர்யபிரகாஷ் 12 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் அபாரஜித் - பிரதோஷ் ரஞ்சன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். 

அதன்பின் 55 ரன்களில் அபாரஜித் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 62 ரன்களில் ரஞ்சனும் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் நெல்லை அணி 19.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை