டிஎன்பிஎல் 2021: மழையால் ஆட்டம் பாதிப்பு!

Updated: Sat, Jul 31 2021 21:54 IST
TNPL 2021: Rain stops play
Image Source: Google

டிஎன்பிஎல் டி20 தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பந்துவீச தீமானித்தது. 

இதையடுத்து களமிறங்கிய மதுரை அணி தொடக்கத்திலேயே பிரவின் குமார், அருண் கார்த்திக் ஆகியோரது விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதன்பின் களமிறங்கிய அனுராதா சிதா ராம் - சத்துர்வேத் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் கணக்கை உயர்த்தியது. பின் 37 ரன்களில் சத்துர்வேத் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த சிதா ராம் அரைசதம் கடந்தார். 

இருப்பினும் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின் 19.2 ஓவர்கள் வீசப்பட்டிருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.

இதனால் மதுரை பாந்தர்ஸ் அணி 19.2 முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களைச் சேர்த்தது.  இதில் அதிகபட்சமாக அனுராதா சிதா ராம் 51 ரன்களை சேர்த்தார். நெல்லை அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை