டிஎன்பிஎல் 2021: ஸ்பார்டன்ஸை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறிய வாரியர்ஸ்!

Updated: Sun, Aug 01 2021 20:18 IST
Image Source: Google

டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - ரூபி திருச்சி வாரியஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பந்துவீசியது.

அதன்படி களமிறங்கிய சேலம் அண்யில் முருகன் அஸ்வினைத் தவிர வேறு யாரும் சரிவர விளையாடாததால், 20 ஓவர்கள் முடிவில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய திருச்சி அணிக்கு சந்தோஷ் சிவ், அமித் சத்விக் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றினார். 

அதன்பின் களமிறங்கிய வீரர்கள் நிதானமாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதன் மூலம் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் டிஎன்பிஎல் புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளைப் பெற்று திருச்சி அணி முதலிடத்தை தக்கவைத்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை