டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பான காட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சைந் நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணிக்கு கேப்டன் ஹரி நிஷாந்த் - சுரேஷ் லோகேஷ்வர் இணை களமிறங்கினர். தொடக்கம் முதலே இவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.  இதில் சுரேஷ் லோகேஷ்வர் 44 ரன்களிலும், ஹரி நிஷாந்த் 34 ரன்களுக்கும் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய ஆதித்யா 37 ரன்களைச் சேர்த்து உதவினார். பின்னர் களமிறங்கிய ஸ்வப்நில் சிங் 17 ரன்களுக்கும், ஜெகதீசன் கௌசிக் 11 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மதுரை பாந்தர்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களைச் சேர்த்தது. திருப்பூர் அணி தரப்பில் திரிலோக் நாக் 2 விக்கெட்டுகளையும், அஜித் ராம், கருப்பசாமி, மணிகண்டன் தலா ஒரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய திருப்பூர் அணிக்கு விஷால் வைத்யா - துஷார் ரஹேஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் விஷால் வைத்யா 21 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த ராஜேந்திரன் விவேக் 11 ரன்களுக்கும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த துஷார் ரஹேஜா அரைசதம் கடந்த நிலையில் 51 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த விஜய் சங்கர் 28 ரன்களிலும், பாலச்சந்தர் அனிரூத் 11 ரன்களுக்கும், கேப்டன் சதுர்வேத் ஒரு ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். 

இறுதியில் புவனேஷ்வரன் 7 பந்துகளில் 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரி என 18 ரன்களைச் சேர்த்தபோதும் 20 ஓவர்கள் முடிவில் திருப்பூர் அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன்மூலம் மதுரை பாந்தர்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தியாதில் திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News