ஐபிஎல் தொடரின் 70ஆவது லீக் ஆட்டத்தில் நேற்று ஒரு சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்தது. ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் சம்பிரதாய ஆட்டத்தில் மோதினர்.

Advertisement

158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 15ஆவது ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.

Advertisement

இந்த நிலையில், ஹைதராபாத் அணியின் பேட்டிங்கின் போது, உம்ரான் மாலிக் பேட்டிங் செய்ய களத்துக்கு தாமதமாக வந்தார். அப்போது பவுண்டரி கோட்டில் நின்று கொண்டிருந்த கேப்டன் மாயங் அகர்வால் உம்ரான் மாலிக்கை வெறுப்பேற்றும் வகையில் ஏதோ பேசினார். ஆனால் உமரான் மாலிக் அதனை கண்டு கொள்ளவில்லை.

இதற்கு பதிலடி தரும் விதமாக மாயங்க் அகர்வால் பேட்டிங் செய்ய வந்த போது , உம்ரான் மாலிக் பந்துவீசினார். மாயங் அகர்வால் விலா எலும்பை பதம் பார்க்கும் வகையில் உம்ரான் மாலிக் பந்துவீசினார். பந்து பட்டதும், சில நொடிகள் வலியை தாங்க முடியாமல் மாயங் அகர்வால் துடித்தார். இருவருக்கும் நடைபெற்ற இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இதனிடையே, ஐபிஎல் போட்டியில் அதிவேகமாக பந்துவீசும் வீரர்களுக்கு தினசரி பரிசு வழங்கப்படுகிறது. இதில் உம்ரான் மாலிக் தொடர்ந்து 14 போட்டியிலும் அதிவேகமாக பந்துவீசியதற்கான விருதை வாங்கினார். இடையில் சில போட்டியில் ரன்களை வாரி வழங்கினாலும், மீண்டும் அபார்ம்க்கு திரும்பினார்.

நடப்பு சீசனில் அவர் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் உம்ரான் மாலிக்கிற்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. இந்திய அணிக்காக விளையாடும் 2ஆவது காஷ்மீர் வீரர் என்ற பெருமையை உம்ரான் மாலிக் பெற்றுள்ளார். உம்ரான் மாலிக் நல்ல ஃபார்மில் இருப்பதால் அவருக்கு முதல் போட்டியிலேயே வாய்ப்பு தரப்படும் என நம்புவதாக ரவி சாஸ்த்ரி தெரிவித்தார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News