ஐபிஎல் தொடரின் முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் நேற்று சிஎஸ்கே - டெல்லி அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்று சிஎஸ்கே முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Advertisement

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சிஎஸ்கே அணி 6 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

Advertisement

சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி நேரத்தில் உதவியவர் எம்.எஸ்.தோனி. கடைசி 11 பந்துகளில் 23 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் தோனிதான் இருந்தார். இந்த சீசன் முழுவதும் சொதப்பியிருந்த தோனி, திடீரென 3 பவுண்டரிகளை விளாசி வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இதனால் விண்டேஜ் தோனியை மீண்டும் பார்த்த ரசிகர்கள் ஆனந்தத்தில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது இரண்டு குழந்தைகள் ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். நேற்றைய போட்டியில் தோனி பேட்டிங் செய்துக்கொண்டிருந்த போது, குழந்தைகள் இருவர் கடவுளிடம் பிரார்த்தனை மேற்கொண்டனர். தோனி வெற்றி பெற்றுக் கொடுக்க வேண்டும் என ஆர்வத்துடன் காத்திருந்ததை போட்டியின் இடையே பெரிய திரையில் காண்பித்தார்கள். இதனை ஆட்டத்தின் போதே தோனி கவனித்தார்.

இறுதியில் தோனி பவுண்டரி அடித்து வெற்றி பெற்றுக்கொடுத்தவுடன் இரண்டு குழந்தைகளும் கண்ணீர் வடிய ஆனந்தத்தில் அழுதுத் தீர்த்தனர். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த கால சிறுவர், சிறுமிகளும் தோனியின் மீது காதல் வைத்துள்ளனர் என்பதை பார்த்து அனைவரும் திகைத்துப்போனார்கள். தோனியும் திகைத்துப்போனார் என்றே கூறலாம்.

 

Advertisement

இதனால் ஆட்டம் முடிந்து பெவிலியன் திரும்பிய தோனி, சிறுவர்கள் இருவரும் இருந்த இடத்திற்கு கீழே சென்று கையை உயர்த்தி உற்சாகப்படுத்தினார். மேலும் அவர்களுக்கு சர்ஃபரைஸ் கிஃப்ட் ஒன்றையும் கொடுத்தார். தனது கையில் இருந்த மேட்ச் பந்தில் கையெழுத்து போட்டு, அதனை சிறுவர்களிடம் தூக்கி போட்டார். அவரின் இந்த செயலால் அந்த குழந்தைகள் நெகிழ்ந்த புகைப்படங்கள் வைராகி வருகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News