விஜய் ஹசாரே கோப்பை: புதுச்சேரியிடம் போராடி தோல்வியைத் தழுவியது தமிழ்நாடு!

Updated: Sun, Dec 12 2021 18:43 IST
Image Source: Google

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடைபெற்ற நான்காவது சுற்று போட்டியில் தமிழ்நாடு - புதுச்சேரி அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீசியது. 

போட்டி தொடங்கும் முன் மழை பெய்ததால் ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி களமிறங்கிய புதுச்சேரி அணி ஃபாபித் அஹ்மதுவின் அரைசதத்தால் 49 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்களைச் சேர்தது. 

இதில் ஃபாபித் அஹ்மத் 87 ரன்களைச் சேர்த்தார். தமிழ்நாடு அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை துரத்திய தமிழ்நாடு அணியில் ஹரி நிஷாந்த், பாபா இந்திரஜித், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஜெகதீசன் - தினேஷ் கார்த்திக் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதமும் கடந்தனர். 

பின்னர் 64 ரன்களில் ஜெகதீசனும், 65 ரன்னில் தினேஷ் கார்த்திக்கும் ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்களும் சரிவர விளையாடவில்லை. 

இதனால் 44 ஓவர்கள் முடிவில் தமிழ்நாடு அணி 204 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் விஜேடி முறைப்படி புதுச்சேரி அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை