கரோனா வைரஸின் இரண்டாவது அலையால் இந்திய மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் இடமில்லாமல், ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். 

Advertisement

மேலும் பயோ பபுளில் இருந்த வீரர்களுக்கு தொற்று உறுதியானதை அடுத்து, ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனை காலவரையின்றி பிசிசிஐ ஒத்திவைத்துள்ளது. அதேசமயம் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கிரிக்கெட் வீரர்கள் தங்காள் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். 

Advertisement

இந்நிலையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனையான ஸ்ரவந்தி நாயுடு வின் தாயார் சமீபத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதில் அவரது சிகிச்சைக்கு ஏற்கெனவே 16 லட்சம் ரூபாய் செலவான நிலையில், மேல் சிகிச்சைக்கு ரூ. 6 லட்சத்து 77 ஆயிரம் தேவைப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் இந்த தொகையை தயார் செய்ய முடியாத ஸ்ரவந்தி நாயுடு நிதி உதவி கேட்டு பிசிசிஐ இடமும், ஹைதராபாத் கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை மனு கொடுத்திருந்தார். ஆனால் அது குறித்து அவர்கள் எந்தவித பதிலும் அவருக்கு அளிக்கவில்லை. 

இந்நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இந்திய அணி கேப்டன் விராட் கோலியை டேக் செய்துள்ளார். இதனைக் கண்ட கோலி உடனே ஸ்ரவந்தி நாயுடு வின் தாயார் மருத்துவ செலவிற்காக 6.77 லட்சத்தை கொடுத்து உதவியுள்ளார்.

கோலி செய்த இந்த உதவி தற்போது அவரது ரசிகர்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. ஏற்கனவே விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் இணைந்து 7 நாட்களில் 11 கோடியை நன்கொடையாக அளித்து மட்டுமின்றி இதேபோன்று அடுத்தடுத்து தனிப்பட்ட முறையில் உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News