புவனேஷ்வர் குமார் நிச்சயம் இடம்பிடிப்பார் - வாசிம் ஜாஃபர்!

Updated: Sat, Jul 09 2022 15:31 IST
Wasim Jaffer Impressed With Bhuvneshwar Kumar's Performance Against England In First T20I (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்துக்கு இடையே நடைப்பெற்ற முதல் டி20 போட்டியில் புவனேஸ்வர் குமார் 3 ஒவரில் 10 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்தார். அந்த விக்கெட் யாரென்றால் இங்கிலாந்தின் புதிய கேப்டன் அதிரடி வீரர் ஜாஸ் பட்லர். 

பட்லர் விளையாடிய முதல் பந்திலேயே போல்ட் ஆக்கினார் புவனேஷ்வர்குமார். நல்ல பார்மில் இருந்த பட்லரை வீழ்த்தியதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் மீம்ஸ்களை உருவாக்கி பாராட்டி மகிழ்ந்தனர். 2ஆவது டி20 போட்டி இன்று இரவு எட்ஜ்பாஸ்டனில் இரவு 7 மணிக்கு நடைப்பெற உள்ளது. 

அக்டோபரில் முதல் வரவிருக்கும் டி20 உலக கோப்பை அணிக்கு யார் யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்று பல்வேறு கருத்து கணிப்புகள் வந்துக்கொண்டுள்ள நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் கூறியுள்ளார்.

இதுகுஇத்து பேசிய அவர், “சர்வதேச கிரிக்கெட்டில் புவனேஷ்வர் குமார் அளவுக்கு பந்தினை ஸ்விங் செய்யும் வீரர்கள் குறைவு. அவரது ஸ்விங்கினால் பேட்ஸ்மேன்கள் திணறுகிறார்கள். வலுவான பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அருமையாக பந்து வீசி வருகிறார் புவனேஷ். அவர் நிச்சயமாக இந்திய டி20 உலக கோப்பை அணியில் இடம் பெருவார். அதில் எனக்கு சந்தேகமே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை