இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியும் எந்தவொரு குறைவுமின்றி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

Advertisement

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 209 ரன்களை மட்டுமே குவித்தது. அதன் பின்னர் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 35.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 215 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வீரரான டேவிட் வார்னர் அம்பயரை திட்டியபடி மைதானத்தில் இருந்து வெளியேறிய விடயம் தற்போது இணையத்தில் அதிகளவு வைரலாகி வருகிறது.

Advertisement

இந்த போட்டியில் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியானது தங்களது முதல் விக்கெட்டை 24 ரன்களிலேயே விட்டுக் கொடுத்தது. அந்த வகையில் நான்காவது ஓவரின் முதல் பந்தை சந்தித்த டேவிட் வார்னர் 11 ரன்கள் எடுத்திருந்த வேளையில் இலங்கை வீரர் மதுஷங்கா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். உடனே மைதானத்தில் இருந்த பவுலரும் அதற்கு அப்பீல் செய்ய மைதானத்தில் இருந்த நடுவரும் அவுட் என்று அறிவித்தார்.

 

ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாத டேவிட் வார்னர் மூன்றாவது அம்பயரிடம் ரிவியூவிற்கு சென்றார். அதில் பந்து லெக் ஸ்டம்பின் மேல் பகுதியில் சற்று விலகியபடி அடித்தது தெரிந்தது. இருப்பினும் அம்பையர்ஸ் கால் முறையில் அவர் ஆட்டமிழந்ததாக மீண்டும் அறிவிக்கப்பட்டது. ஒருவேளை களத்தில் இருந்த அம்பயர் இதனை நாட் அவுட் என்று அறிவித்திருந்தால் நிச்சயம் டேவிட் வார்னர் இந்த விக்கெட்டில் இருந்து தப்பித்திருப்பார் என்பதனால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாத வார்னர் பேட்டால் தனது காலில் அடித்துக் கொண்டது மட்டுமின்றி களத்தில் இருந்த அம்பயர் ஜோயல் வில்சனை கடுமையாக திட்டியபடி மைதானத்திலிருந்து வெளியேறினார்.

தனது விக்கெட் விழுந்த விரக்தியில் அவர் இப்படி செய்து இருந்தாலும் இதுபோன்று நடுவரை நேருக்கு நேர் திட்டியபடி வெளியேறியதெல்லாம் தவறு என்றும் நடுவர்களின் முடிவினை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்றும் ரசிகர்கள் அவரது இந்த செயலை விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News