இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Advertisement

முதல் இன்னின்ஸில் 141 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து அணியை, 2ஆவது இன்னிங்ஸில் வெற்றிக்கு அழைத்துச் சென்றவர் ஜோ ரூட். 277 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய அந்த அணியில் முன்னணி வீரர்கள் ஏமாற்றினர். எனினும் தூண் போன்று நின்ற ஜோ ரூட் 170 பந்துகளை சந்தித்து 12 பவுண்டர்களுடன் 115 ரன்களை அடித்து அசத்தினார். இதன் மூலம் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

Advertisement

இந்நிலையில் ரூட்டின் பேட்டிங்கை விட, அவரின் பேட் தான் அதிக கவனம் பெற்றுள்ளது. 2ஆவது இன்னிங்ஸின் போது நான் ஸ்ட்ரைக்கரில் நின்றுக்கொண்டிருந்த ஜோ ரூட் , தனது பேட்டை கையில் இருந்து அப்படியே விட்டுவிட்டார். ஆனால் பேட் கீழே விழாமல் தானாக நேராக நின்றுக்கொண்டிருந்தது. பேட்டில் எந்தவித அசைவுகளும் இல்லை.

வழக்கமாக பேட்ஸ்மேன்கள் தங்களது கைகளில் பேட்டை பிடித்துக்கொண்டிருப்பார்கள். ஜோ ரூட் மட்டும், தனது பேட்டை அதுவாக நிற்பது போன்று வைத்துவிட்டு, ரன் ஓடும் போது மட்டும் எடுத்துக்கொண்டார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்தனர். அவர் அப்படி என்ன மேஜிக் செய்கிறார் என குழம்பினர். அவரின் பேட்டை மட்டும் அடிப்பகுதியில் தட்டையாக செய்துவிட்டனரா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

இங்கிலாந்து அணியின் தொடர் சொதப்பல் காரணமாக, கேப்டன் பதவியில் இருந்து ஜோ ரூட் நீக்கப்பட்டார். எனினும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பேட்டிங்கில் தனது திறமையை காட்டி வருகிறார். இந்த முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்தது மூலம், இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் 10,000 டெஸ்ட் ரன்களை அடித்த 2ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News