நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி வெலிங்டனில் இன்று நடைபெற்றது. மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இப்போட்டியானது 37 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 37 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 255 ரன்கள் எடுத்தது. 

Advertisement

நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 79 ரன், மார்க் சாம்ப்மென் 62 ரன் எடுத்தனர். இலங்கை தரப்பில் அபாரமாக பந்துவீசிய மகேஷ் தீக்சனா ஹாட்ரிக்குடன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.  இதைத்தொடர்ந்து 256 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கி அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரகளுக்கு விக்கெட்டுகளை இழந்ததால், அந்த அணி 22 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Advertisement

அதன்பின் ஜோடி சேர்ந்த கமிந்து மெண்டிஸ் - ஜனித் லியானகே இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் கமிந்து மெண்டிஸ் அரைசதம் கடக்க, அவருடன் இணைந்து விளையாடிய லியானகே 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் அரைசதம் கடந்து விளையாடி வந்த கமிந்து மெண்டிஸூம் 64 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

இதனால் இலங்கை அணி 30.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓரூக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இப்போட்டியில் நியூசிலாந்து வீரர் நாதன் ஸ்மித் பவுண்டரி எல்லையில் பிடித்த அபாரமான கேட்ச் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி இன்னிங்ஸீன் 29ஆவது ஓவரை வில்லியம் ஓரூர்க் வீசிய நிலையில், ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட ஈஷான் மலிங்கா பெரிய ஷாட்டை விளையாட முயற்சித்தார். ஆனால் பந்து அவர் எதிர்பார்த்ததை விட வேகமாக வந்து பேட்டில் பட்டதுடன் தேர்ட்மேன் திசையை நோக்கி சென்றது.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அப்போது அத்திசையின் பவுண்டரில் எல்லையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த நாதன் ஸ்மித் யாரும் எதிர்பார்க்காத வகையில் அற்புதமான டைவை எடித்து கேட்ச் பிடித்து அசத்தினார். இதனை பார்த்த அனைவரும் ஒரு கணம் ஆச்சரியத்தில் உறைந்தனர். இந்நிலையில் நாதன் ஸ்மித் பவுண்டரில் எல்லையில் பிடித்த இந்த அபாரமான கேட்ச் குறித்த காணொளியானது தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News