ஐபிஎல் தொடரின் முதல் எலிமினேட்டர் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ மற்றும் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Advertisement

இதனையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணியில் ஓப்பனிங்கே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் ஃபாப் டூப்ளசிஸ் டக் அவுட்டாகி ஏமாற்றினார். இதன் பின்னர் வந்த க்ளென் மேக்ஸ்வெல் 9 ரன்களுக்கும், மஹிபால் லாம்ரோர் 14 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேறினர். அணியின் நம்பிக்கை நாயகனாக இருந்த விராட் கோலியும் 25 ரன்களுக்கு ஆவேஷ் கானிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.

Advertisement

முக்கிய விக்கெட்கள் விழுந்ததால், ஆர்சிபி அணி இனி தினேஷ் கார்த்திக்கை நம்பி தான் உள்ளது என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் அனைவரும் ஷாக் கொடுத்தார் ராஜத் பட்டிதார். மறுமுணையில் தூண் போன்று நின்ற பட்டிதார் லக்னோ அணி பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்தார். 

முக்கிய விக்கெட்களை எடுத்த போதும், அவரை லக்னோ பவுலர்களால் சமாளிக்க முடியவில்லை. இதனால் 49 பந்துகளில் ராஜத் பட்டிதார் சதம் விளாசினார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ராஜத் பட்டிதார் 54 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 112 ரன்களை விளாசினார். இவருக்கு உறுதுணையாக ஆடிய தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 37 ரன்களை அடித்தார். இதனால் 20 ஓவர்களில் ஆர்சிபி அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 207 ரன்களை குவித்தது.

இவ்வளவு பெரிய உதவி செய்த ராஜத் பட்டிதர், ஆர்சிபி அணியால் ஒதுக்கப்பட்டவர் ஆவார். கடந்தாண்டு ஆர்சிபி அணிக்காக அறிமுகமான இவர், 4 போட்டிகளில் 71 ரன்களை மட்டுமே அடித்தார். இதனால் இந்தாண்டு அவரை மெகா ஏலத்தில் ஆர்சிபி அணி வாங்கவே இல்லை. 

Advertisement

 

ஆர்சிபி அணி வாங்கியிருந்த லுவ்னித் சிசோடியா காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார். எனவே அவருக்கு மாற்றாக ராஜத் பட்டிதார் ரூ.20 லட்சத்திற்கு மீண்டும் ஆர்சிபி அணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News