இந்தியாவின் பாரம்பரியமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காலிறுதிச்சுற்றுக்கு தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், பஞ்சாப், கர்நாடகா, ஜம்மூ காஷ்மீர், அஸ்ஸாம், சௌராஷ்டிரா ஆகிய அணிகள் முன்னேறின. 

Advertisement

இதன் இரண்டாவது காலிறுதிச்சுற்றுல்  மகாராஷ்ட்ரா அணி உத்திரப்பிரதேச அணியை எதிர்கொண்டன். இதில் டாஸ் வென்ற உத்தரப்பிரதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

Advertisement

அதன்படி முதலில் களமிறங்கிய மகாராஷ்ட்ரா அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 330 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 220 ரன்களை அடித்தர். இப்போட்டியில் மொத்தம் 159 பந்துகளை எதிர்கொண்ட அவர் 10 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்சர்கள் உட்பட 220 ரன்களை சேர்த்தார்.

 

அதிலும் உத்திரப்பிரதேச அணி வீரர் ஷிவா சிங் வீசிய 49 ஆவது ஓவரில் நோ பால் உட்பட அனைத்து பந்துகளையும் சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டு ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் அடித்து தனது ருத்ரதாண்டவத்தை வெளிப்படுத்தினார். இதன்மூலம் முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஓவரில் 7 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் எனும் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News