இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஜோஸ் பட்லர் அரைசதம் கடந்ததுடன் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 68 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா, அக்சார் படேல் தலா 2 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Advertisement

இதனையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் அதிரடியான தொடக்கத்தை வழங்கி 26 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் மற்றொரு தொடக்க வீரரான் அபிஷேக் சர்மா அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசியதுடன் 20 பந்துகளில் அரைசதம் கடந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். 

அதன்பின் அபிஷேக் சர்மா 5 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 79 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, திலக் வர்மா 19 ரன்களை எடுத்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 12.5 ஓவர்களிலேயே வெற்றியை இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் இந்த டி20 தொடரில் முன்னிலையும் பெற்றுபெற்றுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் சஞ்சு சாம்சன் ஒரே ஓவரில் 22 ரன்களைக் குவித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரை கஸ் அட்கிசன் வீசிய நிலையில், அதனை எதிர்கொண்ட சஞ்சு சாம்சன் முதலிரண்டு பந்துகளில் பவுண்டரியும், 4ஆவது பந்தில் சிக்ஸரும், கடைசி இரண்டு பந்துகளீல் மீண்டும் பவுண்டரியை விளாசி அந்த ஓவரில் மட்டும் 22 ரன்களைக் குவித்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். இந்நிலையில் இக்காணொளி தற்போது ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.  

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News