ஐபிஎல் 2022: விக்கெட் கீப்பிங்கில் அசத்திய ஜாக்சன் - ஜாம்பவான்கள் வாழ்த்து!

Updated: Sat, Mar 26 2022 22:38 IST
Image Source: Google

குஜராத்தை சேர்ந்த ஷில்டன் ஜாக்சனை, கடந்த சில நாட்களுக்கு முன் பத்திரிகையாளர்கள் சிலர் வெளிநாட்டு வீரர் என்று கூறினர். இதனால் ஜாக்சன், கடும் மன வருத்ததில் இருந்தார். அதற்கு காரணம் சௌராஷ்டிரா அணிக்காக ரஞ்சி போட்டியில் அதிக சதம் விளாசிய 2ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றவர் ஜாக்சன்.

ஆனால் நம்மை யாருக்கும் தெரியவில்லையே என்று சோகத்தில் இருந்த ஜாக்சன், இம்முறை தாம் யார் என்று நிரூபித்துள்ளார். கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக்கிட்ட ஜாக்சன், தனது விக்கெட் கீப்பிங் திறமையால் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினிடமிருந்தே பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை அணியின் ராபின் உத்தப்பா பவுண்டரி சிக்சர் என ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார். வருண் சக்ரவர்த்தி வீசிய ஆட்டத்தின் 7.5வது ஓவரில் ராபின் உத்தப்பா இறங்கி வந்து பெரிய ஷாட் அடிக்க முயன்றார். ஆனால் பந்து அவர் கணித்ததை விட இடதுபுறம் விலகி செல்ல, அதனை அபாரமாக பிடித்த ஷெல்டன் ஜாக்சன் மின்னல் வேகத்தில் ஸ்டம்ப்பிங் செய்தார்.

ஷெல்டன் ஜாக்சனின் இந்த விக்கெட் கீப்பிங் ஸ்டைல் இணையத்தளத்தில் வைரலானது. ஜாக்சனின் இந்த விக்கெட் கீப்பிங் செயலுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் பெண்டுல்கர் பாராட்டு தெரிவித்தார். ஜாக்சனின் அந்த ஸ்டம்பிங்கை பார்க்கும் போது தோனியை பார்த்தது போல் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

தற்போது விக்கெட் கீப்பிங்கில் அசத்தியுள்ள ஜாக்சன், பேட்டிங்கிலும் கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.எனினும் சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். சென்னை அணி ரன் குவிக்க தடுமாறியது, அவர்களுக்கு 2020ஆம் ஆண்டு நியாபகத்தை தந்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை