ஐபிஎல் 2022: லலித் யாதவின் அபார த்ரோ; நடையைக் கட்டிய விராட்!

Updated: Sat, Apr 16 2022 22:28 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 27ஆவது போட்டியான இன்றைய போட்டியில் டூ பிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதி வருகின்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் ஆகியோரது அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்களைச் சேர்த்தது. 

இந்நிலையில் இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சிங்கிள் எடுக்க முயற்சித்தார். 

அப்போது பாய்ண்ட் திசையிலிருந்த லலித் யாதவின் அபாரமான த்ரோவால் நூழிலையில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். முன்னதாக ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் விராட் கோலி இதேபோல் ரன் அவுட்டாகினார்.

 

இந்த சீசனில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி ஒரு அரைசதத்துடன் 107 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ப்தியில் உள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை