ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன் மூலம் தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த ஹைதராபாத் அணி மீண்டும் தங்களுடைய வெற்றி பாதைக்கும் திரும்பியுள்ளது. 

Advertisement

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய பாட் கம்மின்ஸ்,”இந்த போட்டியில் வெற்றிபெற்றது அற்புதமானது. இது எங்கள் பாணிக்கு ஏற்றது, நாங்கள் வெற்றி பெறுவோம் என்பது எங்களுக்குத் தெரியும். இது ஒரு நல்ல விக்கெட், பந்து இங்கே சுழன்று கொண்டிருக்கிறது. இதுபோன்ற விக்கெட்டில் ஒரு பந்துவீச்சாளர் ஒரு ஓவரில் 10 ரன்களுள் வீசியிருந்தல் அது அவர்களுக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியைப் போல் உணரலாம்.

Advertisement

இந்த ஸ்கோரைத் துரத்தும்போது நீங்கள் அரை நம்பிக்கையுடன் இருப்பது ஒருவித பைத்தியக்காரத்தனம். அபிஷேக் சர்மாவின் பேட்டிங்கிற்கு நான் பெரிய ரசிகர். மேலும் நாங்கள் எங்களுடைய செயல் முறையில் எந்த மாற்றத்தையும் செய்ய விரும்பவில்லை. கடந்த ஆண்டு பேட்டிங் குழு நன்றாக விளையாடியது, அவர்களின் திறமைகளில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அதனால் எஞ்சியுள்ள போட்டிகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம்” என்று தெரிவித்துள்ளார். 

இப்போட்டி குறித்து பேசினால் டாஸ் வென்று முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடியான ஆட்டத்தின் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களையும், பிரப்ஷிம்ரன் சிங் 42 ரன்களையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 34 ரன்களையும் சேர்த்து அசத்தினர்.

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் டிராவிஸ் ஹெட் 66 ரன்களில் ஆட்டமிழக்க, அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தியதுடன் 141 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதனமூலம் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டி அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News