ஐபிஎல் தொடர் மூலமாக இந்திய அணிக்குக் கிடைத்த வீரர்களில் முக்கியமானவர் ரிஷப் பந்த். ஐபிஎல் தொடரில் தனது அதிரடி பேட்டிங் மூலமாக கவனம் ஈர்த்த பந்த், உடனடியாக இந்திய அணியில் இடம்பிடித்தார். தோனியின் ஓய்வுக்குப் பிறகு இந்திய அணியின் மூன்று வடிவிலான போட்டிகளிலும் நிரந்தர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கலக்கி வருகிறார்.

Advertisement

பந்த் போன்ற அதிரடி வீரர்கள் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவ்வாளவாக சோபிப்பதில்லை. ஆனால் பந்த் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி பல போட்டிகளில் வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளார். குறிப்பாக ஆஸி மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக சமீபத்தில் நடந்த போட்டிகளில் நான்காவது இன்னிங்ஸ்களில் அவரின் சிறப்பான ஆட்டம் டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்தியா சார்பாக முதல் முதலாக ஐசிசி மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதைப் பெற்ற வீரராக பாந்த் இருக்கிறார்.

Advertisement

கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வரும் பந்த் , 2 ஆண்டுகளாக ஐபிஎல்  தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.  கடந்த ஆண்டு டெல்லி அணியை இறுதிப் போட்டிவரை தன் தலைமையில் அழைத்துச் சென்றார். இப்போது ஐபிஎல் அணியைத் தலைமை தாங்குபவர்களில் இளம் வயது கேப்டனாக ரிஷப் பந்த் இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது ரிஷப் பந்த் மறைந்த தன்னுடைய தந்தையப் பற்றி உருக்கமான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். ரிஷப் பந்தின் தந்தை ராஜேந்திரா பந்த் கடந்த 2017 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது தந்தையைப் பற்றி தன்னுடைய பதிவில் ‘நான் உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன் அப்பா.  என் அப்பா, நான் நானாக இருந்த போதும், நான் என்னவாக ஆக விரும்பினேனோ அதற்காகவும் என்னைஆதரித்து அன்பு செலுத்தினார். தந்தைகள் வலிமையாக இருப்பதற்கு காரணம் இருக்கிறது.

அவர்களின் வலிமை நமக்கு பாதுகாப்புணர்வைக் கொடுக்கிறது. நீங்கள் இப்போது சொர்க்கத்தில் இருப்பீர்கள் அப்பா. அங்கிருந்தும் என்னை பாதுகாப்பீர்கள் என்று தெரியும். என்னுடைய அப்பாவாக இருந்ததற்கு நன்றி. நான் எப்பொழுதும் உங்களை மிஸ் செய்து கொண்டும் உங்கள் மீது அன்பு செலுத்திக்கொண்டும் இருப்பேன். நாம் மீண்டும் சந்திக்கும் வரை’ என நெகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News