தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நிறைவு பெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. 2023 உலகக் கோப்பையில் சந்தித்த தோல்விக்கு பின் விராட் கோலி போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமல் கேஎல் ராகுல் தலைமையில் இத்தொடரில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா 2018க்குப்பின் 2ஆவது முறையாக சவாலான தென் ஆப்பிரிக்க மண்ணில் ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.

Advertisement

முன்னதாக இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக பார்ல் நகரில் நடைபெற்ற 3ஆவது போட்டியில் சஞ்சு சாம்சன் சதமடித்து 108 ரன்கள் விளாசி இந்தியா 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார். கடந்த 2015இல் அறிமுகமான அவர் 8 வருடங்களாகியும் இதுவரை இந்திய அணியில் நிலையான வாய்ப்புகளை பெறாதது பலமுறை விமர்சனங்களையும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ஆனால் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக சதமடித்து கால் தடம் பதித்துள்ள சஞ்சு சாம்சனுக்கு இனிமேலாவது தேர்வுக் குழுவினர் தொடர்ச்சியாக வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராக விளையாடும் திறமை கொண்ட அவருக்கு 2027இல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாக கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “அவர் எந்தளவுக்கு திறமை வாய்ந்தவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் இன்று விளையாடிய இன்னிங்ஸ் அவருடைய சர்வதேச கேரியரை துவக்கியுள்ளது. இதற்கு முன்பு வரை சில போட்டிகளில் வாய்ப்பு பெற்ற அவர் பல போட்டிகளில் கழற்றி விடப்பட்டார். ஆனால் நீங்கள் சதமடிக்கும் போது தேர்வுக் குழுவினரை இம்ப்ரஸ் செய்வது மட்டுமல்லாமல் மீண்டும் உங்களை தேர்வு செய்வதற்கான அழுத்தத்தை அவர்களுக்கு கொடுக்கிறீர்கள். 

எனவே இனிமேலாவது அவருக்கு இந்தியா தொடர் வாய்ப்புகளை கொடுக்குமா என்பதை பார்க்க வேண்டும். ஏனெனில் அடுத்த உலகக் கோப்பை 4 வருடங்களுக்கு பின் நடைபெற உள்ளதுவிக்கெட் கீப்பிங் செய்யக்கூடிய அவர் மிடில் ஆர்டரில் உங்களுக்கு நல்ல வாய்ப்பாக இருப்பார். இந்த சதத்தால் சாம்சன் தன்னுடைய கேரியரை மீண்டும் துவங்கியுள்ளார். 

உள்ளூரிலும் டி20 கிரிக்கெட்டிலும் விளையாடி ஐபிஎல் தொடரிலும் கேப்டனாக செயல்பட்ட அவருக்கு அழுத்தத்தை எப்படி உள்வாங்கி செயல்படுவது என்பது தெரியும். இப்போட்டியில் நிதானமாக துவங்கிய அவர் பின்னர் அதிரடியாக விளையாடினார். இது தான் அவருடைய தரத்திற்கும் அனுபவத்திற்கும் நிகரான சரியான இன்னிங்ஸ் ஆகும்” என்று கூறியுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News