மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா - வங்கதேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது.

Advertisement

முதல் விக்கெட்டுக்கு ஷஃபாலி வர்மா- ஸ்மிருதி மந்தனா ஜோடி 96 ரன்கள் எடுத்தனர். 47 ரன்னில் மந்தனா எதிர் பாராத வகையில் ரன் அவுட் ஆனார். ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷஃபாலி வர்மா அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 55 ரன்கள் எடுத்த போது போல்ட் முறையில் வெளியேறினார்.

Advertisement

இதனால் 16 ஓவரில் இந்திய அணி 125 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தொடர்ந்து 2 விக்கெட்டுகளை இழந்தது. ரிச்சா கோஷ் 4 ரன்னிலும் கிரன் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து தீப்தி சர்மா -ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். 

இறுதியில் ஓவரில் தீப்தி சர்மா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 35 ரன்கள் எடுத்திருந்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் ருமானா அஹ்மது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியில் ஃபர்கானா ஹோக்- முர்ஷிதா காதுன் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடக்கம் கொடுத்தனர். பின் 21 ரன்களில் காதும் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஃபர்கானாவும் 30 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய கேப்டன் நிகர் சுல்தான அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 39 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த வங்கதேச வீராங்கனைகள் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

Advertisement

இதனால் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச மகளிர் அணி 7 விக்கெட்டுகளை இழந்து வெறும் 100 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஷஃபாலி வர்மா, தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். 

இதன்மூலம் இந்திய மகளிர் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி, இத்தொடரில் தங்களது நான்காவது வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News